திருவள்ளூர்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த வாரத்தில் ஏற்பட்ட கன மழையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகளை சந்தித்த நிலையில் இன்றும் நாளை சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிகப்பு கொடுத்துள்ளது.
இதனால் இம்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை முதல் மிக கனமழை ஒரு சில இடங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது சிகப்பு ஆவடி போக்குவரத்து சாலையில் அமைந்துள்ள பகுதிகளில் மரங்கள் சிக்னல் கம்பங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட போக்குவரத்துக் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சுற்றுப்பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பங்களை சீர் செய்யும் பணியை ஆய்வாளர் திரு.கோதண்டம் தலைமையில் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆவடி செக்போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள சிக்னல் பொழுது ஆகியிருக்கும் கம்பங்களை கண்டறிந்து வெல்டிங் அடித்து சிமெண்ட் ஜல்லி கற்கள் கொட்டி சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக தமிழக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது 17 இம் 18 ஆம் தேதி கன மழை பெய்யும் என்றும் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் அறிவிப்பு வந்த நிலையில் போக்குவரத்து ஆய்வாளர் கோதண்டம் தலைமையில் பணிகள் சீர் செய்து வருகின்றனர்.
இந்த சீர்செய்யும் பணியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் திரு,பாஸ்கர். திருஉமாபதி. திருகோபால். மற்றும் தலைமை காவலர்கள் காவலர்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.