பெரம்பலூர் : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.P.பகலவன் இ.கா.ப அவர்கள் (13.12.2023) -ம் தேதி பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகம், மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடம், மாவட்ட குற்ற பிரிவு, தனிப்பிரிவு அலுவலகம் , ஆயுதப்படை வளாகம், ஆயுதக்கிடங்கு, மோட்டார் வாகன பிரிவு, மோப்பநாய் படைப்பிரிவு ஆகிய பிரிவுகளை பார்வையிட்டும் பதிவேடுகளை சரிபார்த்தும் ஆய்வுகள் மேற்கொண்டார். இந்நிகழ்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.C.ஷ்யாம்ளா தேவி அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.மதியழகன் ஆகியோர்கள் உடனிருந்தனர்.