கன்னியாகுமரி: சிறுவயதிலேயே குழந்தைகள் போக்குவரத்து விதிகளை தெரிந்து கொள்ளும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான போக்குவரத்து பூங்காவினை (Children’s Traffic Park) மறுபுனரமைப்பு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். உத்தரவின் பேரில் ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான போக்குவரத்து பூங்கா மறுபுனரமைக்கப்பட்டு(10.07.2024) கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.E.சுந்தரவதனம் IPS* அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் ஆயுதப்படை வளாகத்தில் மறுபுனரமைக்கப்பட்ட சமூக நலக்கூடத்தையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டு திறந்து வைத்தார்கள்.
இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மதியழகன்,மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தாமரைக் கண்ணன்,தனிப்பரிவு காவல் ஆய்வாளர் திரு.பெர்னார்ட் சேவியர் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.