திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி இரயில் நிலையத்திற்கு வரும் ரயில் பயணிகள் மற்றும் முருகன் கோயில் பக்தர்களின் வசதிக்காக, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் அதிநவீன டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் வசதி இன்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. QR Code மூலம் முன்பதிவு
பயணிகள் தங்களது செல்போன் மூலம் லாக்கரில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, தேவையான லாக்கரை தேர்வு செய்து உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். பின்னர் மீண்டும் QR Code-ஐ பயன்படுத்தி தங்களது உடைமைகளை எளிதாக பெற்றுக்கொள்ளும் வகையில் தானியங்கி தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்களது உடைமைகள் குறித்து கவலைப்படாமல் தரிசனம் செய்து திரும்புவதற்கு இந்த புதிய டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் வசதி பெரும் பயனுள்ளதாக இருக்கும் என பயணிகள் தெரிவித்தனர்.




















