மதுரை: 200க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன், மதுரை அருகே கப்பலூரில், போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் ,ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்று, பல்வேறு கோரிக்கைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மார்க் ஊழியர்கள் தனது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அனுமதி அளிக்காத காவல்துறையினர் டாஸ்மார்க் ஊழியர்கள் அவர்களது குடும்பத்தில் கலந்து கொண்டனர்.
பெண்களையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க
வைத்துள்ளனர். 25 ஆண்டுகளாக பணி செய்து வரும் டாஸ்மார்க் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு நிலையான சமமான ஊதியம் வழங்கிட வேண்டும் என்றும் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும் என்றும் காளி மது பாட்டில் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி , மதுரை, திருமங்கலம் கப்பலூர் டாஸ்மாக் உடன் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் . போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மார்க் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















