சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சென்னை விமான நிலையத்தில் “விமான நிலைய காவல் ரோந்து” திட்டத்தை துவக்கி வைத்து இதில் பணி புரியும் 10 காவல் ஆளிநர்களுக்கு வழங்கிய பேட்ச்சுகள் வழங்கினார்.
இந்தக் குழுவில், சிறப்பு பயிற்சி பெற்ற 10 காவலர்களும் இத்திட்டத்திற்காக வழங்கப்பட்ட இரண்டு பிரத்தியோக ரோந்து வாகனம், ஒரு பேட்டரி வாகனம் மற்றும் நவீன சாதனங்களுடன் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுவர்.