சென்னை: சென்னை பெருநகர காவல் துறை சார்பில் டிஜிட்டல் மோசடி சம்பந்தமான குறும்பட போட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதில் பங்கு பெற்ற 75 குறும்பட வீடியோக்கள் பரிசீலிக்கப்பட்டு சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டன.
ஒவ்வொரு தலைப்பின் கீழும் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெறும் வீடியோ களுக்கு தலா ஒரு லட்சம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது.
குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.