பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், நெடுங்கூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வெள்ளைச்சாமி (50). என்பவர் நடந்து சென்றுகொண்டிருந்த போது அவ்வழியாக வந்த குற்றவாளி ஒருவன் மேற்படி நபரிடம் கத்தியை காட்டி பணம் தருமாறும் இல்லையென்றால் கொண்றுவிடுவதாக மிரட்டி மேற்படி வெள்ளைச்சாமியிடம் இருந்த 500 ரூபாயை பறித்துச் சென்றார். மேற்படி சம்பவம் தொடர்பாக பாடாலூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் வழக்கின் குற்றவாளியான மதன்குமார் (22). த/பெ ரவிச்சந்திரன் சக்திமாரியம்மன் கோவில் தெரு ஸ்ரீரங்கம் திருச்சி மாவட்டம். என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் மேற்படி குற்றவாளியின் மீது திருச்சி மாவட்டத்தில் 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது என்பது தெரியவந்த நிலையில் குற்றவாளியின் மீது வழக்கு பதிவு செய்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் உத்தரவின்படியும் பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.பழனிச்சாமி அவர்களின் வழிகாட்டுதலின்படியும் மேற்படி குற்றவாளியை பாடாலூர் காவல் ஆய்வாளர் திரு.மணிவண்ணன் அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.