கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மகேந்திரா சர்வீஸ் சென்டரில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பொன்னுமனி என்பவர் 4 மாதங்களாக HR ஆக பணிபுரிந்து வருவதாகவும், குற்றவாளியும் அதே நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், இந்நிலையில் (22.08.2026) ஆம் தேதி அதிகாலை சுமார் 00.00 மணிக்கு எதிரி மகேந்திரா சர்வீஸ் சென்டரின் காம்பவுண்ட் சுவரின் மீது ஏறி குதித்து, உள்ளே சென்று அங்கிருந்த சாவியை எடுத்து கல்லாவை திறந்து அதிலிருந்த ₹.1,13,000 /- ரூபாய் பணத்தை திருடி சென்று விட்டதாகவும், பொன்னுமனி என்பவர் அட்கோ காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை திருடிய குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















