திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் (11.05.2025) அன்று காவல்துறையினர் ரோந்து சென்ற போது கீழநத்தம் சாலையில் வாகனங்களை வழிமறித்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டிக் கொண்டிருந்த தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (22). மதுரை மாவட்டம் தாதக்கிணறு பகுதியைச் சேர்ந்த முனியசாமி (25). வெங்கடேசன் (26). கண்ணதாசன் (21). வசந்தகுமார் (24). மற்றும் முனீஸ்வரன் (25). ஆகிய ஆறு நபர்களை பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர், கிருஷ்ணசாமி கைது செய்து அவர்களிடம் இருந்து அரிவாள், இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்