இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி காவல் நிலைய பகுதியில் சக்திவேல் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானபாண்டியன் என்பவருக்கு இராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி திரு.மெஹபூப் அலிகான் அவர்கள் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள். திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த காவல்துறையினர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் திரு.கார்த்திகேயன் ஆகியோரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் பாராட்டினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி