மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial Monitoring Committee) அமைக்கப்பட்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் படி நிலைகளில் நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் பொறுப்பில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய வழக்குகளின் நீதிமன்ற விசாரணைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் கடந்த 2021 ம் வருடம் தாக்கலான கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியான செல்லபாண்டி (42). த/பெ ஆண்டிசாமி, ஆலத்தூர், திருமால்புரம். (கள்ளர்) என்பவருக்கு எதிராக மதுரை மாவட்டம், தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த மதுரை மாவட்டம், தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் நீதிபதி திரு. செல்லபாண்டி அவர்கள் (13.01.2026)-ம் தேதி மேற்படி கொலை முயற்சி வழக்கில ஈடுபட்ட குற்றத்திற்காக மேற்கண்ட குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 6,000/-அபராதமும் விதித்து, வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளார். அதன் பேரில் மேற்படி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து கண்காணித்து வழக்கின் சாட்சியங்கள் அனைவரையும் முறையாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை பெற்றுத்தர சிறப்பாக வாதாடிய சிறப்பு அரசு வழக்கறிஞர் திரு. ராமசாமி, நீதிமன்றத்தில் துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் திரு. சங்கரேஸ்வரன் மற்றும் நீதிமன்ற தலைமை காவலர் திரு. கனகராஜ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டி உள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்
















