தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு வழக்கில் 5.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, குற்றவாளிகளைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்த போதைப்பொருள் தடுப்புப் படையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் திரு. ஐ. முத்துராஜா அவர்கள், தலைமைக் காவலர்கள் திரு. மு. கார்த்திக் அவர்கள், திரு. ஜே. ஜோசப் அவர்கள், காவலர்கள் திரு. அ. விசு அவர்கள், திரு. ப. தினேஷ்குமார் அவர்கள் மற்றும் போக்குவரத்துப் பிரிவு தலைமைக் காவலர் ஆகியோரின் சிறப்பான பணியைப் பாராட்டி, இன்று (23-08-2026) திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள், அவர்களை சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்கள்.




















