திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி DSP.கார்த்திக் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் காதர்மைதீன், ராம்சேட் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் அம்மையநாயக்கனூர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அம்மையநாயக்கனூர் கிழக்கு தோட்டத்தை சேர்ந்த செல்வம்(42). என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் செல்வத்தை கைது செய்து 2 கிலோ கஞ்சா, நாட்டு துப்பாக்கி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்படி சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















