திருநெல்வேலி : திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் , ராமநாதன் தலைமையிலான காவல்துறையினர் 26.04.2025 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சுத்தமல்லி இரயில்வே பாலம் அருகே நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் (26). என்பவரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் பிரவீன்குமார் சுமார் 60 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சுத்தமல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர் .
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்