தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பிரேம் ஆனந்த் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு. ரவிச்சந்திரன் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமதி. ஐயலின் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை ஜங்ஷன் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பர்னபாஸ் மகன் ஸ்பெல்மேன் (58) என்பதும் அவர் விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் குற்றவாளி ஸ்பெல்மேனை கைது செய்து அவரிடமிருந்த 250 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம் மற்றும் ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.