திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கணக்கன்பட்டியில் பிரசித்தி பெற்ற சத்குரு ஜீவ சமாதி கோவில் அமைந்துள்ளது, கணக்கன்பட்டியில் இருந்து ஜீவசமாதிக்கு 50 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களின் உத்தரவின் படி, பழனி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் தனஜெயன் அவர்களின் அறிவுறுத்தலின் படி கணக்கன்பட்டி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆயக்குடி காவல் உதவி ஆய்வாளர் ஆனந்த் அவர்கள் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழிகாட்டுதலும் அறிவுரைகளும் வழங்கப்பட்டது.
ஆட்டோக்கள் இயக்கப்படும் போது காக்கி சட்டை கண்டிப்பாக அணிய வேண்டும், ஆறுக்கு மேற்பட்ட பயணிகளை அதிக அளவில் ஆட்டோவில் ஏற்றிச் செல்லக்கூடாது, சற்குரு ஜீவ சமாதிக்கு பக்தர்களை ஏற்றிச் செல்லும் பொழுது, ஆட்டோக்களை மெதுவாக இயக்க வேண்டும், வரும் பயணிகளிடம், மரியாதையாகவும், அன்பாகவும் பேச வேண்டும் மற்றும் குடிபோதையில் வாகனங்களை இயக்கக் கூடாது, நேம் பேட்ஸ் அணிந்து ஆட்டோ ஓட்ட வேண்டும் என கணக்கன்பட்டி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் ஆனந்த் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா