திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், ஹரித்துவாரமங்கலம் பகுதியை சேர்ந்த கார்த்திக், த/பெ சுப்பிரமணியன், மேல காலணி தெரு, ஹரித்துவாரமங்கலம் என்பவர் தனது மூன்று மகள்களுக்கு சுதாகர் த/பெ தியாகராஜன், மேற்கு தெரு, ஓவர்சேரி மற்றும் ராஜேந்திரன் @ கிட்டி ராஜேந்திரன், த/பெ முனியாண்டி, மேல காலணி தெரு, ஹரித்துவாரமங்கலம் ஆகியோருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் ஹரித்துவாரமங்கலம், பெருங்குடியை சேர்ந்த குமார் மகன் விக்னேஷ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்படி நான்கு நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ் குமார் அவர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் படி இன்று 31.01.2023 குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.