திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கோ.சசாங் சாய். இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறையினர் 4 ரோடு ஜங்ஷன் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு சிக்னலில் கோட்டிற்கு முன்னதாகவே வாகனங்களை நிறுத்த வேண்டும் எனவும், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் அறிவுரை வழங்கினார்கள். மேலும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய அறிவுரை மற்றும் முகக் கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.