சேலம் : சேலம் மாவட்டம், மல்லூரை சேர்ந்த கிருபாகரன் (40), என்பவரின் செல்போனுக்கு 601129057362 என்ற எண்ணில் இருந்து TRADING செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என வந்த வாட்ஸ் அப் செய்தியை நம்பி பல்வேறு தவணைகளில் போலியான இணையதளத்தில் ரூ. 80.50,000/- முதலீடு செய்ததாகவும் ரூ. 1,90,000/- லாபம் பெற்றதாகவும் பின்னர் முதலீடு செய்த தொகையினை எடுக்க முடியாமல் தான் ஏமாற்றப்பட்டதாகவும் தான் இழந்த ரூ. 78,60,000/- பணத்தை மீட்டு தர வேண்டிய புகார் மனு சமர்ப்பித்திருந்தார். மேற்படி மனு தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபினவ், அவர்களின் அறிவுரைப்படி வழக்குப்பதிவு செய்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரின் நடவடிக்கையின் பெயரில் மோசடி செய்த கேரளாவை சேர்ந்த சைதலவி கூட்டலுங்கள் (50), ரூபாய் 5 லட்சம் மோசடி செய்த டெல்லியை சேர்ந்த சவுரவ் தாகூர் (23). ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் குற்றவாளிகள் மீது ஆந்திர பிரதேஷ் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் இதுபோன்ற போலியான இணையதள செயலிகள் மற்றும் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறுவதையும் லோன் தருவதாகவும் செல்போனுக்கு அனுப்பும் அப்டேட் என்ற குறுஞ்செய்திகளை நம்பி தங்களின் வங்கி விபரம் மற்றும் otpகளை யாரிடமும் பகிர வேண்டாம் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டால் உடனடியாக சைபர் க்ரைம் ஹெல்ப் லைன் நம்பர் 1930 & www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உடனே புகார் அளித்தால் இழந்த பணத்தை மீட்டு தர இயலும் எனவும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்