நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராய கடத்தல் மற்றும் விற்பனை ஆகியவை தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஷ்சிங் இ.கா.ப, அவர்களின் பரிந்துரையின் படி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் திரு.ஜானிடாம் வர்க்கிஸ் இ.ஆ.ப, அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதின் பேரில் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக வெளிப்பாளையம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடர் கள்ளச்சாரய கடத்தல் மற்றும் விற்பனை குற்றத்தில் ஈடுபட்ட தேன்மொழி 47. என்ற நபரை வெளிப்பாளையம் காவல் துறையினர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வாறு சிறப்புடன் செயல்பட்ட வெளிப்பாளையம் காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் பாராட்டினார்கள். இதுபோன்ற கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
மேலும், இது போன்ற குற்ற செயல்களில் உங்களது ஊரிலும் யாரேனும் ஈடுபட்டால் உங்கள் எஸ்பியிடம் பேசுங்கள் 8428103090 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தருபவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும்.