மதுரை : சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை உறுதி மொழியானது இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய எனது பங்களிப்பை நல்க வேண்டும் என காவல்துறையினரும் என்று நேற்று உறுதி மொழி ஏற்றனர். மதுரை மாநகர காவல்துறையினர் அனைவரும் நேற்று (31.10.2020) காலை 11.00 மணிக்கு தேசிய ஒற்றுமை நாள் (National Unity Day) உறுதிமொழி ஏற்று மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.
இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கையாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வுவினை பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்று உளமாற உறுதியளிக்கிறேன் என்று நேற்று உறுதி மொழி ஏற்றனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.நாராயண மூர்த்தி