மதுரை: மதுரை மாவட்டம்,உசிலம்பட்டியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட கிளை சார்பில் மத்திய அரசைக் கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட கிளை சார்பில் நீட் தேர்வு முறைகேடு மற்றும் கல்வித் துறையின் சீரழிவுக்கு பொறுப்பேற்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து , கண்டன கோஷங்களை எழுப்பி வட்ட கிளைத் தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில், பெரிய கருப்பன் தொடக்கவுரை நிகழ்த்தினார். மாவட்ட சத்துணவு துணைத் தலைவர் இந்திராணி கண்டன உரை நிகழ்த்தினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் மனோகரன் நிறைவு உரை நிகழ்த்தினார். வட்டகிளை பொருளாளர் ஆசை நன்றி உரையாற்றினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















