மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் இ.கா.ப அவர்களின் அறிவுரைப்படி, இன்று 19.08.20 காலை 06:30 க்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கு, மதுரை அரசு பொது மருத்துவமனையில் இருந்து டாக்டர்.நாகராகினி, டாக்டர் நிரஞ்சனா ஸ்ரீ, டாக்டர். சங்கீதா ஆகியோர்களால் யோகா பயிற்சி கொடுக்கப்பட்டது. அதில் காவல் துணை கண்காணிப்பாளர் (ஆயுதப்படை) திரு.ஜோசப் நிக்சன் மற்றும் 95 ஆயுத படை காவலர்கள் யோக பயிற்சியில் பங்கேற்றனர் மற்றும் பயிற்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு மூலிகை கசாயம் பாக்கெட்கள் வழங்கப்பட்டது.