மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் வேளாண்மை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விடுதலைக் சிறுத்தை கட்சியின் சார்பில் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணி தலைமையில் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆற்றலரசு,மாநிலத் துணைச் செயலாளர் செல்லப்பாண்டியன்,
மாநிலத் துணைச் செயலாளர் கலைச்செல்வன்,தொகுதிச் செயலாளர் தமிழ்ச் செல்வம் , சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் பெருமாள் ,ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது போலீசாருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைது செய்யப்பட்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி