பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த செல்வி.ஜனனி பிரியா அவர்கள் கோயமுத்தூர் மாவட்டம், மதுவிலக்கு அமலாக்க தடுப்பு சிறப்பு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளராக பணி மாறுதலில் சென்றுவிட்டார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த திரு.T.சீராளன் அவர்கள் (21.03.2023) -ம் தேதி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சி.ஷ்யாம்ளா தேவி அவர்களிடம் அறிக்கை செய்து,மங்களமேடு உட்கோட்டத்தின் 8-வது துணைக் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.