பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், நன்னை கிராமத்தைச் சேர்ந்த பார்வதி (60). என்கின்ற மூதாட்டி நன்னை பேருந்து நிலையத்தில் இருந்து தனது மகன் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அறிமுகமில்லாத இரண்டு நபர்கள் மூதாட்டியிடம் பேச்சுக்கொடுத்து கொண்டே வந்தனர். பின்னர் அம்மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 6 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்றுவிட்டனர். என்று மேற்படி மூதாட்டி குன்னம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த குன்னம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து மேற்படி வழக்கின் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் அவ்வழியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தும் பல கோணங்களில் விசாரணை செய்தும் வந்த தனிப்படையினர் மேற்படி குற்ற வழக்கில் பாட்டில்மணி (எ) மணிகண்டன் (27). த/பெ சுந்தர் ராஜா முதல் தெரு சுப்பிரமணியபுரம் திருச்சி. என்பவர் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதன்படி மேற்படி குற்றவாளியை கைது செய்து விசாரித்ததில் அந்நபர் மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கொலை, கொள்ளை, செயின்பறிப்பு போன்ற பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்த நிலையில் மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்த குன்னம் காவல்துறையினர் குற்றவாளியிடமிருந்து 6 1/2 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின், உத்தரவின் பேரிலும் மங்களமேடு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.T.சீராளன் அவர்களின், வழிகாட்டுதலின்படியும் மேற்படி குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த உதவி ஆய்வாளர் திரு.மதியழகன் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள், வெகுவாக பாராட்டினார்கள்.