சேலம் : சேலம் சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு விழா பல்வேறு குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் திரு. லேந்திரபாபு, அவர்கள் கலந்து கொண்டார் முன்னதாக காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டவர் தொடர்ந்து மரக்கன்றுகள் நட்டார். இதனை அடுத்து பல்வேறு குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் கண்காட்சியும் அவர் பார்வையிட்டு பொருட்களை இழந்தவர்களுக்கு மீட்கப்பட்ட பொருட்களை வழங்கினார். பின்னர் பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
முன்னதாக பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் நகை செல்போன்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நேரில் பார்வையிட்டார் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சைலேந்திரபாபு சேலம் மாநகரில் தற்போது 40 சதவீதம் கொலை வழக்குகள் குறைந்துள்ளதாகவும் லாட்டரி விற்பனை மற்றும் போதை பொருட்கள் தடை செய்வதில் சேலம் சரகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் சேலம் சரகத்தில் தற்போது வரை 120 கிராமங்கள் போதைப்பொருட்கள் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் போதை பொருட்கள் இல்லாத மாவட்டங்களாக சேலம் சரகத்தை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். கோவை குண்டுவெடிப்பு சம்பவம் போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனை சமயங்களிலும் பண்டிகை காலங்களிலும் காவலர்களுக்கான கட்டாய வார ஓய்வு வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது இதை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்