இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இராமேஸ்வரம் உட்கோட்டத்தில் பல்வேறு இடங்களில் மீனவர்களிடம் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் கடற்கரை பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்குமாறும், போதைப் பொருள் கடத்தலை ஆதரிப்போருக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனைகள் குறித்து மீனவ மக்களிடையே எடுத்துரைத்தனர்.