திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், திருவம்பலாபுரத்தை சேர்ந்த போக்சோ வழக்கு குற்றவாளி மனோ (19). இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி விடுத்த கோரிக்கை படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், (01.09.2025) அன்று மனோ குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்