திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் கண்ணன் சாலையில் உள்ள இருசக்கர வாகன விற்பனையகம் மீது கடந்த மே 14 ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ஈடுபட்ட பொன்னாக்குடியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் இசக்கிமுத்து (19). ராமர் மகன் முத்துக்குமார்(18). ஆகியோரை பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையர், வி.பிரசன்னகுமார், (மேற்கு) காவல் உதவி ஆணையர், கே.அஜுகுமார், (நகர சரகம்) ஆகியோர் பரிந்துரைத்தனர். அதனடிப்படையில் மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., உத்தரவின்படி, இசக்கிமுத்து, முத்துக்குமார் ஆகிய இருவரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (14.06.2025) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்