மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உரப்பனூர் கண்மாய் பகுதியில் பைக்கில் சென்ற வாலிபரை வழிமறித்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர். திருமங்கலம் மம்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் ( 32). கொலை வழக்கில் குற்றவாளியான இவர் நீதிமன்றத்திற்கு சென்று ஆஜராகி விட்டு திருமங்கலம் அருகே உள்ள உரப்பனூர் கண்மாய் பகுதியில் தனது மோட்டார் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி பிரகாஷை கொலை செய்துவிட்டு கண்மாய்க்குள் தூக்கி எறிந்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார்,IPS சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்தார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.A.வேல்முருகன்
மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா