சென்னை : சென்னை பெருநகரில் குற்றங்களை தடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் வழங்கிய உத்தரவின்படி, தொடர்ந்து கொலை, கொலைமுயற்சி, திருட்டு மற்றும் வழிபறி ஆகிய குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்த அரும்பாக்கம் பாரதியார் நகரை சேர்ந்த அலெக்ஸ் (எ) ஜேசுதாஸ் (23), படப்பை பாரதியார் 3வது தெருவை சேர்ந்த பாலாஜி (24), வில்லிவாக்கம் சன்னதி தெருவை சேர்ந்த தீனதயாளன் (39), பெரும்பாக்கம் எழில்நகரை சேர்ந்த கலைவாணன் (26), செந்தில்குமார் (34), வானகரம் போரூர் கார்டன் 5வது தெருவை சேர்ந்த லோகநாதன் (42), சிவகங்கை மாவட்டம் காளையர் கோவில் பகுதியை சேர்ந்த நடராஜ் (39), பெரம்பூர் ஜமாலியா குடியிருப்பை சேர்ந்த பிரேம்குமார் (34), தண்டலம் கோவூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சரவணன் (எ) முருகன் (37), ஓட்டேரி பிரிக்ளின் சாலையை சேர்ந்த ரமேஷ் (22), ஷெனாய் நகர் கஜலஷ்மி காலனி 4வது தெருவை சேர்ந்த ஈஸ்வர் (22) ஆகிய 11 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.