மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதி கூடக்கோவில் அருகே டி.கொக்குளத்தில் உள்ள கல்குவாரியில் கூடக்கோவில் போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது கற்களை உடைக்க அரசு அனுமதியின்றி வெடிமருந்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பரஞ்சோதி, ராஜேந்திரன், அழகுமலை, ஜெயசீலன், ஆகிய 4 பேரையும் கைது செய்து குவாரியில் இருந்த லாரி மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.மேலும் அருகிலிருந்த மற்றொரு கல்குவாரியில் போலீசார் சோதனை செய்தபோது 17 டெட்டனேட்டர்களும், 23 வெடிமருந்து பொருள்களும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மகாலிங்கம் மற்றும் மீனா என்பவரையும் போலீசார் இந்திய வெடிமருந்து சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.A.வேல்முருகன்