திருநெல்வேலி: மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுடலை ஆண்டவர் திருக்கோவில் கொடை விழா நடைபெற்றது . திருவிழாவின்போது மருதநாச்சிவிளை விலை பகுதியை சேர்ந்த சக்திவேல்(40), என்பவரது 6வயது மகன் அஸ்வினை பெற்றோர்கள் தவறவிட்டனர். பின்பு பெற்றோர்கள் அருகிலிருந்த புறக்காவல் நிலையத்தில் உள்ள *உதவி ஆய்வாளர் முரளி அவர்களிடம் புகார் அளித்தனர் தகவல் தெரிந்தவுடன் அனைத்து காவலர்களுக்கும் தகவல் தெரிவித்து குழந்தையை தேடும் படி உத்தரவிட்டார். உதவி ஆய்வாளர் திரு முரளி மற்றும் காவலர் ராஜாராம்(3097)அவர்கள்* தீவிரமாக தேடியபோது குழந்தை சிறிது தூரம் அழுதுகொண்டே நின்று கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். பின்பு குழந்தை அஸ்வினை அவர்களின் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு ஒப்படைத்தனர். பின்பு பெற்றோர்களும் மற்றும் திருவிழாவில் கலந்துகொண்ட பொதுமக்களும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் D. N. ஹரிகிரண் பிரசாத் அவர்கள் உதவி ஆய்வாளர் முரளி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரை பாராட்டினார்.