சேலம் : சேலம் மாவட்டம், வாழப்பாடி உட்கோட்டம் காரிப்பட்டி காவல் நிலைய எல்லை உடையார் பாளையம் எஸ்.என் மங்கலம் பகுதியை சேர்ந்த அரிசிஅப்பன் (55), என்பவர் தின்பண்டம் விற்பனை செய்வது போல் மோட்டார் சைக்கிளில் வைத்து தொடர்ச்சியாக தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை காரியாபட்டி காவல் ஆய்வாளர் அவர்கள் சிறையில் அடைத்தவரை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபினவ் அவர்களின் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் திரு.கார்மேகம், அவர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்