சேலம் : சேலம் மாவட்டம், ஊர்க்காவல் படையில் ஆத்தூர் மற்றும் சங்ககிரி படை பிரிவில் 55 காலி பணியிடங்கள் நிரப்ப தகுதியுள்ள நபர்கள் (26/11/2022), அன்று சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதி : பத்தாம் வகுப்பு (18) முதல் (50), வயதிற்குள் உயரம் ஆண்கள் 167 செ. மீ, பெண்கள் 157 செ.மீ, மற்றும் நல்ல உடல் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எவ்வித குற்ற வழக்குகளில் ஈடுபட்டிருக்கக் கூடாது. தேர்விற்கு ஆஜராகும் போது விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ரெண்டு கல்வித் தகுதி சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு (அசல் மற்றும் நகல்கள்) கொண்டு வர வேண்டும். ஊர்க்காவல் படை பிரிவானது தன்னார்வ தொண்டு ஆகும். எனவே தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதத்திற்கு 5 நாட்கள் மட்டும் பணிபுரிய அழைக்கப்படுவர். பணிபுரியும் நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ₹560 வீதம் மாதம் (5X560) 2800 வழங்கப்படும்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்