செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த மேலகோட்டையூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் திரு.கெளதமன் 59, இவர் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ளார், 05.10.2021 இன்று காலை அவரது வீட்டிலேயே துப்பாக்கியால் தன்னை தானே தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீதிபதி ஒருவருக்கு பாதுகாப்பு பணியில் தற்போது உள்ளார். தகவலறிந்து சென்ற தாழம்பூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். துப்பாக்கியையும், குண்டுகளையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. முழுமையான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.