சென்னை : தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சூடும் இறுதி சுற்று போட்டி சென்னையில் உள்ள கமாண்டோ துப்பாக்கிச் சுடும் தளத்தில் நடைபெற்றது , தமிழ்நாடு முழுவதிலும் இருந்து காவல்துறை உயர் அதிகாரிகள் (ASP முதல் DGP வரை) இறுதிப்போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் Champion of Champion பதக்கம் மற்றும் கோப்பையை வென்றார்.