திண்டுக்கல்: திண்டுக்கல், குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சரவணபாண்டி தலைமையில் சார்பு ஆய்வாளர் யாசர் மற்றும் காவலர்கள் பழனி, சாமி தியேட்டர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர் அப்போது அந்த காரில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் காரில் வந்த ஜாபர்சாதிக்(44). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1050 கிலோ ரேஷன் அரிசி, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















