தேனி: தேனி மாவட்ட எஸ்.பி. K.S. பிரவீன் கௌதம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட காவல்துறையினர் தீவிர நடை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




















