சேலம் : கடந்த (24/03 /2018), ஆம் தேதி மேட்டூர் காவல் நிலைய சரகம் மேட்டூர் அக்கினி மாரியம்மன் கோவில் பின்புறம் வசிக்கும் கண்ணன் (26), என்பவருக்கும் மேல் குள்ள வீரன் பட்டி கார்த்திக் மனைவி வனிதா என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாகவும், இதன் முன் விரோதம் காரணமாக குற்றவாளிகள் வனிதா கணவர் கார்த்திக் (41), குள்ள வீரன் பட்டி மேட்டூர் ஜெகதீஷ் (31), மேல் உள்ள வீரன் பட்டி மேட்டூர் பாலாஜி (33), குள்ள வீரன் பட்டி மேட்டூர் பாஸ்கரன் (33), மேட்டூர் ஆகிய நான்கு நபர்களும் ஒன்று சேர்ந்து கண்ணனை வெட்டி கொலை செய்த குற்றத்திற்காக குற்றவாளிகள் நான்கு பேர் மீதும் மேட்டூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு.
இவ்வழக்கில் விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் குற்றவாளி பாஸ்கரன் (33), என்பவர் கடந்த (02/07 2021), அன்று இறந்துவிட்டார். மற்ற குற்றவாளிகள் மீது சாட்சிகளின் அடிப்படையில், குற்றம் நிரூபிக்கப்பட்டு (28/7/2022), ஆம் தேதி மேட்டூர் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு.குமார் சரவணன், அவர்கள் குற்றவாளிகள் கார்த்திக், ஜெகதீஷ், பாலாஜி, ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் அபராதம் தலா ரூபாய் 10,000 விதித்து தீர்ப்பு வழங்கி குற்றவாளிகளை சிறையில், அடைக்க உத்தரவிட்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்