திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கொமரலிங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட RG நகர் பகுதியைச் சேர்ந்த மணிபிரபு35. என்பவர் உடுமலை T.N.E.B இல் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்ததாகவும், 03.03.2020 ஆம் தேதி உடுமலை E.B அலுவலகத்தின் முன்பு இருந்த போது அதே அலுவலகத்தில் வயர்மேன் ஆக பணிபுரிந்து வந்த கண்ணன் 49. என்பவர் பணி நியமித்தல் குறித்து தகராறில் ஈடுபட்டதாகவும்,
அப்போது மரக்கட்டையால் அடித்ததால் மயங்கி விழுந்த மணிபிரபு 35.என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்ததாக இறந்தவரின் மனைவி சுபாஷினி 30. என்பவர் 03.03.2020 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் கொமரலிங்கம் காவல்நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் குமரலிங்கம் காவல் நிலைய குற்ற எண். 49/2020 U/s. 302 IPC இன் கீழ் வழக்குப்பதிவு செய்து, வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கண்ணன்(49) என்பவரை குமரலிங்கம் காவல்துறையினர் விரைந்து கைது செய்து, 03.03.2020 ஆம் தேதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று 03.02.2022 ஆம் தேதி திருப்பூர் PDJ நீதிமன்ற நீதிபதி திரு.சொர்ணம் நடராஜன் அவர்கள் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கண்ணன் 49. என்பவருக்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் 1000/- ரூபாய் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 03 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்கள்.