சென்னை : சென்னை ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட போரூர் காவல் நிலைய எல்லையில், உள்ள ஐயப்பன்தாங்கல் பெரிய கொளுத்துவாஞ்சேரி பகுதியில் இரவு நேரத்தில் காரில் சென்ற பெண்ணை மடக்கி கும்பல் ஒன்று கூட்டு பலாத்காரம் செய்தது. இந்த வழக்கில் தொடர்புடைய அய்யப்பன் தாங்கல் பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (22), கருப்பையா (27), தினேஷ் (28), மற்றும் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய எபினேசர் (29), சுனில் (24), சூர்யா (23), ஆனந்த் (22), முபாரக் (23), வெங்கடேஷ் (26), ஆகிய 9 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும்படி ஆவடி காவல் ஆணையர் திரு.சந்தீப்ராய் ரத்தோர், உத்தரவிட்டார். அதன்படி காவல்துறையினர், 9 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.