சென்னை :சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தொடர்ந்து கொலை, கொலைமுயற்சி, திருட்டு மற்றும் வழிபறி ஆகிய குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தொடர்ந்து கொலை, கொலைமுயற்சி, திருட்டு, வழிபறி மற்றும் செல்போன் பறிப்பு ஆகிய குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கார்மேகம் மற்றும் தினேஷ் (T-14 மாங்காடு காவல் நிலையம்), குமார் (எ) குள்ள குமார் (T-7 ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையம்) ஆகிய மூன்று குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.