இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.M.துரை.IPS., அவர்கள் உத்தரவின் பேரில் இராமநாதபுரம் உட்கோட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.