திண்டுக்கல் : ஈரோடு மாவட்டம், இருப்புப் பாதை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வத்திரு.கற்பகவள்ளி அவர்கள் இயற்கை எய்தினார். இதையடுத்து அவருடன் 2011 ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்றிணைந்து இறந்த காலரின் குடும்பத்திற்கு ரூ.12,64,250 நிதி திரட்டினார்கள். இந்நிலையில் (02.05.2023) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் உயர்நீத்த காவலரின் தந்தையிடம் ரூ.12,64,250 நிதியை வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.





















