திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கோமாளிப்புதூரில் வினோத் குமார் என்பவர் தோட்டத்தில் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் வயர்களை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பழனி சிவகிரிபட்டியை சேர்ந்த நவாஸ் மகன் ரியாஸ்உசேன்(19). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து காப்பர் வயர்களை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















