திருவண்ணாமலை : (13.12.2023) தமிழ்நாடு மாநில அளவில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கானா பாடல் போட்டியில் முதல் பரிசினை திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு காவல் நிலையத்தை சேர்ந்த முதல்நிலை காவலர் எண்-1649 திரு.A.ரகோத்தமன் அவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.25,000/- பரிசுத்தொகையினை வழங்கி சிறப்பித்தார். மேலும்15.12.2023) வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.M.S.முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.