நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை நடைபெறாமல் தடுக்கும் வகையில் கள்ளச்சாராய ஒழிப்பு வேட்டை நடத்தப்பட்டது. நாகை மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட 38 நபர்களை கைது செய்தும் அவர்களிடமிருந்து 2540 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் 90 ML அளவுள்ள 50 பாண்டி மது பாட்டில்கள் மற்றும் 180 ML அளவுள்ள 105 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, சிறப்புடன் செயல்பட்ட நாகை மாவட்ட காவல் துறையிரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங், இ.கா.ப., அவர்கள் பாரட்டினார்கள். போன்ற குற்ற செயல்களில் உங்களது ஊரிலும் யாரேனும் ஈடுபட்டால் உங்கள் எஸ்-பியிடம் பேசுங்கள் 8428103090 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தருபவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும்.